tamilnadu

img

பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற தடையா?

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். 
ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ராத்பால் மசூதியில் இன்று மிலாது நபி சிறப்பு தொழுகை நடை பெற்றது. இந்த தொழுகையில் பருக் அப்துல்லா தனது கட்சித் தொண்டர்களுடன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற முயன்ற போது அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மக்கள் ஜனநாயக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி  தனது டுவிட்டர் பக்கத்தில்,
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவைத் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்திய அரசு, தங்களுக்கு விருப்பமில்லாதவர்களைத் துன்புறுத்துவதையும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக இரும்புக் கரத்தைப் பயன்படுத்துவதும் வெளிப்பட்டுவிட்டது. இது எங்களின் ஒட்டுமொத்த உரிமையைப் பறிப்பதாகும். இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.